என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இத்தாலி ஓபன் டென்னிஸ்"
- இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
- இந்தத் தொடரில் எலீனா ரிபாகினா சாம்பியன் பட்டம் வென்றார்.
ரோம்:
இத்தாலியன் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோமில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் கஜகஸ்தான் வீராங்கனை எலீனா ரிபாகினாவும், உக்ரைன் வீராங்கனை அன்ஹெலினா கலினினாவும் மோதினர்.
இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் ரிபாகினா எளிதில் வென்றார். தொடர்ந்து நடைபெற்ற 2வது செட்டில் 1-0 என ரிபாகினா முன்னிலை பெற்றிருந்தபோது கலினினாவுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் போட்டியில் இருந்து வெளியேறினார்.
கலினினா போட்டியில் இருந்து வெளியேறியதால் ரிபாகினா இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
- இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
- பெண்கள் ஒற்றையர் பிரிவில் உக்ரைன் வீராங்கனை இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
ரோம்:
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் ரஷியாவின் குடர்மெடோவா, உக்ரைனின் அன்ஹெலினா கலினினாவுடன் மோதினார்.
இந்தப் போட்டியில் கலினினா முதல் செட்டை 7-5 என கைப்பற்றினார். இரண்டாவது செட்டை குடர்மெடோவா 7-5 என வென்றார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை கலினினா 6-2 என கைப்பற்றினார்.
இறுதியில், கலினினா 7-5, 5-7, 6-2 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இதேபோல் கஜகஸ்தான் வீராங்கனை ரிபாகினா, லாத்வியாவைச் சேர்ந்த ஆஸ்டா பென்கோவுடன் மோதினார். இதில் ரிபாகினா 6-2, 6-2 என்ற நேர் செட்களில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
- இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
- பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்னேறினார்.
ரோம்:
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற 3-வது சுற்றில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், குரோசிய வீராங்கனை டோனா வெகிக்குடன் மோதினார்.
இந்தப் போட்டியில் ஸ்வியாடெக் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
இதேபோல், ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா, செக் வீராங்கனை கரோலினா முசோவாவுடன் மோதினார். இதில் படோசா
6-4, 7-6, 6-2 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
- இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
- பெண்கள் ஒற்றையர் பிரிவில் ரிபாகினா காலிறுதிக்கு முன்னேறினார்.
ரோம்:
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற 3-வது சுற்றில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, செக் குடியரசு வீராங்கனை மார்கெடா வாண்ட்ரூசோவாவுடன் மோதினார்.
இந்தப் போட்டியில் ரிபாகினா 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்